Saturday, May 7, 2011

I have a dream ...

கவலைகள் இல்லா உறக்கம் - அதில்
இன்பங்கள் நிறைந்த கனவு
பசுமைகள் நிறைந்த நிலங்கள் - அதில்
சில்லென ஓடும் ஓடை
மரங்கள் நிறைந்த வனம் - அதில்
நிற்காதிசைக்கும் குயில்கள்
வேட்டை ஆடா புலிகள் - அதனால்
பயமின்றி உலவும் மான்கள்
மாசற்ற தென்றல் காற்று - அதில்
இனிமை நிறைந்த கீதம்
கைக்கெட்டும் உயரம் பழங்கள் - அதில்
தின்னத் தெவிட்டா சுவைகள்
பாய்ந்து சிதறும் அருவிகள் - அவை
பிறந்து வந்த முகடுகள்
அமைதியாக ஓடும் நதி - அதில்
பாய்ந்து நீந்தும் மீன்கள்
பனி படர்ந்த புல்வெளி - அதில்
மேய்கின்ற ஆடு மாடு
தேங்கி நிற்கும் தண்ணீர் - அதில்
குட்டியோடு குளிக்கும் யானை
தேவை யுத்தங்கள் அற்ற பூமி
மனிதர்கள் அற்ற தீவு - அதில்
தனிமையில் நான்

No comments:

Post a Comment