Saturday, May 7, 2011

Conversation with God

கடவுள்

என் மீது என்னடா கோபம் உனக்கு?
சொல்லாமல் வாய் அடைத்து போனாய் எதற்கு?
கோபமா? தாபமா? வேகமா? சந்தேகமா?
நீ செய்த தவறுக்கு தண்டனை எனக்கு

மாற்றானோடு நீ பேசிச் சிரித்து குலாவுகையில்
என் மனம் பதைக்குதே என்னென்று நான் சொல்வேன்?
நாள் தோறும் குற்ற உணர்ச்சியிலே வெந்து நான் மடிகின்றேன்
இத்தண்டனயை எனக்களித்து
என்ன நீ கண்டாயோ சொல்?
-இது மனிதன்

சினம் கொண்டு சீறுவதும் மனிதப் பண்பே!
வாய் ஓயாமல் பேசுவதும் மனிதப் பண்பே!
கோபமும் தாபமும் மனிதப் பண்பே!
சந்தேகப் பேய் அதுவும் மனிதப் பண்பே!

உன்னை படைத்ததை தவறென்றாய் மனிதா!
படைக்கப் பட்டதின் சுகமறிவாயா?
வாழ்க்கையை தண்டனை என்றே சொன்ன நீ
அழகான ரோஜாவின் முள்ளறிவாயா?
மாற்றானோடு குலாவுகிறேன் என்ற நீ
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றறிவாயா?
குற்ற உணர்ச்சியிலே மடிகிறேன் என்ற நீ - அது
குற்றம் புரிந்தோரின் உடைமை என்றறிவாயா?
வாழ்கை ஒரு ரோஜா - அதை
இரசிக்கக் கற்றுகொள்.
புலம்பி என்னிடம் வந்து அழுது பயனில்லை
வாழ்கையிலே என்றும் நீ கடினமாய் உழைத்திட்டால் உன்
கடின உழைப்பினிலே பெரும் பகுதி நான் சுமப்பேன்
வாழ்கை ஒரு பஞ்சு மெத்தை
அதை சுகிக்க கற்றுக்கொள்.
அதில் துன்பங்கள் சிறு கற்கள்
அதை அகற்றக் கற்றுக்கொள்.


வாழ்க்கை ஒரு தென்றல்
அதை சுவாசிக்கக் கற்றுக்கொள்!
அதில் துன்பங்கள் சிறு தூசு
அதை சகிக்கக் கற்றுக்கொள்

வாழ்க்கையை வாழ்வதொரு பாடம் - அதை
வாழும் காலம் மட்டும் வழுவாமல் கற்றுக்கொள்

வாழ்க்கை ஒரு பாற்கடல் -அதன்
விடத்தை நீ சகித்தால்
அமுதமும் உனதுடைமை
இவ்வாறு வாழ்ந்து விட்டு
என்ன துன்பம் எனக்கூறு
துடைப்பதற்கு நான் உண்டு - துடைக்கப்
படுவதற்கு ஏதுண்டு?
- என்றார் கடவுள்

AS LONG AS YOU LIVE KEEP LEARNING HOW TO LIVE

No comments:

Post a Comment